திருமறைக்காடு – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருமறைக்காடு

(1)
கற்பொலி சுரத்தின் எரி கானினிடை மாநடமதாடி, மடவார்
இல்பலி கொளப்புகுதும் எந்தை பெருமானதிடமென்பர், புவிமேல்
மற்பொலி கலிக்கடல் மலைக்குவடெனத் திரைகொழித்த மணியை
விற்பொலி நுதல் கொடியிடைக் கணிகைமார் கவரும் வேதவனமே
(2)
பண்டிரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறில் கடைய வந்த விடமுண்ட குழகன் தனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார்
வெண்திரைகள் செம்பவள முந்துகடல் வந்தமொழி வேதவனமே
(3)
காரியல் மெல்லோதி நதிமாதை முடிவார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவென்பர், நெடுமாட மறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணிலம் ஒண்படக நாளும்இசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே
(4)
நீறு திருமேனியின் மிசைத்தொளி பெறத் தடவி வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்த பதியாம்
ஊறுபொருள் இன்தமிழ் இயற்கிளவி தேருமட மாதர்உடனார்
வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை தேரும்எழில் வேதவனமே
(5)
கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொடிடக்கை படகம்
எத்தனை உலப்பில் கருவித் திரள்அலம்ப, இமையோர்கள் பரச
ஒத்தற மிதித்து நடமிட்ட ஒருவர்க்கிடமதென்பர், உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே
(6)
மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையில் எழுந்தகதிர் தாரகை மடங்க அனலாடும் அரனூர்
சோலையின் மரங்கள்தொறு  மிண்டியின வண்டுமது உண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்க சுறவங் கொணரும் வேதவனமே
(7)
வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலை வளைத்து
அஞ்சகம் அவித்த அமரர்க்கமரன் ஆதி பெருமானதிடமாம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர் முனிவக்கண நிறைந்து மிடை வேதவனமே
(8)
முடித்தலைகள் பத்துடை முருட்டுரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலமுன் வைத்தலமரக் கருணை வைத்தவன் இடம், பலதுயர்
கெடுத்தலை நினைத்தறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே
(9)
வாசமலர் மேவியுறை வானு நெடுமாலும் அறியாத நெறியைக்
கூசுதல் செயாத  அமணாதரொடு தேரர் குறுகாத அரனூர்
காசுமணி வார்கனக நீடுகடலோடு திரைவார் துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே
(10)
(11)
மந்தமுரவங் கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன மேவுசிவன் இன்னருளினால்
சந்தமிவை தண்தமிழின் இன்னிசையெனப் பரவு பாடல்உலகில்
பந்தனுரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வானுலகமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page