சீகாழி

<– சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. தோடுடைய செவியன் (பிரமபுரம்)
2. நறவ நிறைவண்டு (புறவம்)
3. பூவார் கொன்றை (காழி)
4. துஞ்சலும் துஞ்சல் (பொது)
5. சுரர்உலகு நரர்கள்பயில்
6. பிரமபுரத்துறை பெம்மான்
7. அரனை உள்குவீர்
8. கல்லால் நீழல் (பொது)
9. ஓருருவாயினை
10. வரமதே கொளாது
11. தக்கன் வேள்வி (பூந்தராய்)
12. இயலிசை எனும் (புகலி)
13. பிறையணி படர்சடை (கழுமலம்)
14. முன்னிய கலை (புகலி)
15. எந்தமது சிந்தை (சண்பை)
16. சங்கமரு முன்கை (தோணிபுரம்)
17. பெண்ணியல் உருவினர் (புறவம்)
18. விளங்கியசீர்ப் பிரமனூர்
19. பூமகனூர் புத்தேளுக்கு
20. பிரமனூர் வேணுபுரம்
21. மண்ணில் நல்ல வண்ணம் (கழுமலம்)
22. உற்றுமை சேர்வது
23. அயிலுறு படையினர் (கழுமலம்)
24. சேஉயரும் (கழுமலம்)
25. மடல்மலி கொன்றை (கழுமலம்)
26. நீலநன்மாமிடற்றன் (கொச்சைவயம்)
27. அறையும் பூம்புன (கொச்சைவயம்)
28. திருந்து மாகளிற்றின் (கொச்சைவயம்)
29. பங்கமேறு மதிசேர் (சண்பை)
30. பல்லடைந்த வெண்தலையில் (சிரபுரம்)
31. வாருறு வனமுலை (சிரபுரம்)
32. நம்பொருள் நம்மக்கள் (காழி)
33. அடலேறு அமரும் (காழி)
34. நல்லார் தீமேவும் (காழி)
35. உரவார் கலையின் (காழி)
36. நல்லானை நான்மறை (காழி)
37. பண்ணினேர் மொழி (காழி)
38. நலங்கொள் முத்து (காழி)
39. விண்ணியங்கு மதிக்கண்ணி (காழி)
40. பொங்கு வெண்புரி (காழி)
41. பொடியிலங்கு திருமேனி (காழி)
42. சந்தமார் முலை (காழி)
43. அன்ன மென்னடை (சிரபுரம்)
44. வண்தரங்கப் புனற்கமல (தோணிபுரம்)
45. கரும்பமர் வில்லியை (தோணிபுரம்)
46. எரியார் மழுவொன்றேந்தி
47. எம்பிரான் எனக்கமுதம் (பிரமபுரம்)
48. கறையணி வேலிலர் (பிரமபுரம்)
49. கரமுனம் மலரால் (பிரமபுரம்)
50. இறையவன் ஈசன் (பிரமபுரம்)
51. விதியாய் விளைவாய் (புகலி)
52. ஆடலரவு அசைத்தான் (புகலி)
53. உகலியாழ் கடல் (புகலி)
54. உருவார்ந்த மெல்லியலோர் (புகலி)
55. விடையதேறி வெறி (புகலி)
56. கண்ணுதலானும் (புகலி)
57. எய்யா வென்றி (புறவம்)
58. பந்துசேர் விரலாள் (பூந்தராய்)
59. செந்நெலங் கழனி (பூந்தராய்)
60. மின்னன எயிறுடை (பூந்தராய்)
61. காலைநன் மாமலர் (வெங்குரு)
62. நிலவும் புனலும் (வேணுபுரம்)
63. பூதத்தின் படை (வேணுபுரம்)
64. வண்டார் குழல் (வேணுபுரம்)
65. பந்தத்தால் வந்தெப்பால் (கழுமலம்)
66. யாமாமாநீ (காழி)
67. காடது அணிகலம்
அப்பர் தேவாரம்:
1. பார் கொண்டு
2. படையார்
3. மாதியன்று
சுந்தரர் தேவாரம்:
சாதலும் பிறத்தலும்

திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருமழபாடி 

(1)
காலையார் வண்டினம் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழபாடியே
(2)
கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழபாடியே
(3)
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல் விரலாளொடு பயில்விடம்
மந்தம் வந்துலவு சீர் மாமழபாடியே
(4)
அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே
(5)
கங்கையார் சடையிடைக் கதிர்மதி அணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன், தீதிலாச்
செங்கயல் கண்ணுமையாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழபாடியே
(6)
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழபாடியே
(7)
விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந்தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
(8)
கரத்தினால் கயிலையை எடுத்த காரரக்கன்
சிரத்தினை ஊன்றலும் சிவனடி சரண்எனா
இரத்தினால் கைந்நரம்பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழபாடியே
(9)
ஏடுலா மலர்மிசை அயன், எழில் மாலுமாய்
நாடினார்க்கரிய சீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழபாடியே
(10)
உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்தறிவிலா நீசர்சொல் கொள்ளன்மின்
பொறி பிடித்தரவினம் பூணெனக் கொண்டு ,மான்
மறி பிடித்தான்இடம் மாமழபாடியே
(11)
ஞாலத்தார் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழபாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற்றார்களே

 

திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருமழபாடி 

(1)
அங்கையார் அழலன், அழகார் சடைக்
கங்கையான், கடவுள், இட மேவிய
மங்கையான் உறையும் மழபாடியைத்
தங்கையால் தொழுவார் தகவாளரே
(2)
விதியுமாம் விளைவாம், ஒளிஆர்ந்ததோர்
கதியுமாம் கசிவாம், வசியாற்றமா
மதியுமாம், வலியா மழபாடியுள்
நதியந்தோய் சடை நாதன் நற்பாதமே
(3)
முழவினான், முதுகாடுறை பேய்க்கணக்
குழுவினான், குலவும் கையிலேந்திய
மழுவினான் உறையும் மழபாடியைத்
தொழுமின் உம் துயரானவை தீரவே
(4)
கலையினான், மறையான், கதியாகிய
மலையினான், மருவார் புர மூன்றெய்த
சிலையினான் சேர் திருமழபாடியைத்
தலையினால் வணங்கத் தவமாகுமே
(5)
நல்வினைப் பயன், நான்மறையின் பொருள்
கல்வியாய கருத்தன், உருத்திரன்
செல்வன் மேய திருமழபாடியைப்
புல்கியேத்தும் அது புகழாகுமே
(6)
நீடினார் உலகுக்குயிராய் நின்றான்
ஆடினான் எரி கானிடை மாநடம்
பாடினார் இசை மாமழபாடியை
நாடினார்க்கில்லை நல்குரவானவே
(7)
மின்னினார் இடையாளொரு பாகமாய்
மன்னினான் உறை மாமழபாடியைப்
பன்னினார் இசையால் வழிபாடுசெய்
துன்னினார் வினையாயின ஓயுமே
(8)
தென்இலங்கையர் மன்னன் செழுவரை
தன்னிலங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னிலங்கிய மாமழபாடியை
உன்னிலங்க உறுபிணி இல்லையே
(9)
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும் தொழத் தழல் மாண்பமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப் பற்றறுப்பார்களே
(10)
நலியும் நன்றறியாச் சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழபாடியுள்
ஒலிசெய் வார்கழலான் திறம்உள்கவே
மெலியும் நம்முடன் மேல் வினையானவே
(11)
மந்த முந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந்தேத்துவான்
கந்தமார் கடல் காழியுண் !ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கில்லை பாவமே

 

திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருமழபாடி

(1)
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே, கருதார்புரம்
உளையும் பூசல் செய்தான், உயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான், மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றையந்தார் மழபாடியுள் அண்ணலே
(2)
காச்சிலாத பொன்நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன், நஞ்சுமுன் ஆடினான்
பேச்சினால் உமக்காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகைசூழ் மழபாடியை வாழ்த்துமே
(3)
உரங்கெடுப்பவன், உம்பர்கள்ஆயவர் தங்களைப்
பரங்கெடுப்பவன், நஞ்சை உண்டு, பகலோன் தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீயெழச் செற்றுமுன்
வரம் கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே
(4)
பள்ளமார் சடையில் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடையேறிய வேதியன்
வள்ளல், மாமழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின் வினையாயின ஓயவே
(5)
தேனுலாமலர் கொண்டு மெய்த்தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்ட முன்ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே குறி கூடுமே
(6)
தெரிந்தவன் புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவார்அவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்றுடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின் வினையாயின போகுமே
(7)
சந்தவார் குழலாள்உமை தன்னொரு கூறுடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்
மைந்தன் வார்பொழில்சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே
(8)
இரக்கமொன்றுமிலான் இறையான் திருமாமலை
உரக்கையால் எடுத்தான்தன் தொல்முடி பத்திற
விரல்தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே
(9)
ஆலமுண்டமுதம் அமரர்க்கருள் அண்ணலார்
காலனார் உயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடியார் தவத்தார்களும் சார்விட
மாலயன் வணங்கும் மழபாடிஎம் மைந்தனே
(10)
கலியின் வல்லமணும், கருஞ்சாக்கியப் பேய்களும்
நலியுநாள் கெடுத்தாண்ட என்நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழவும் பல ஓசையும்
மலியு மாமழபாடியை வாழ்த்தி வணங்குமே
(11)
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ் கடற்காழிக் கவுணியன்
***

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page