திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (1):
திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (2):
திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (4):
அவளிவணல்லூர் – சம்பந்தர் தேவாரம்:
சீகாழி – சம்பந்தர் தேவாரம் (65)
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற உம்பர், அப்
பாலே சேர்வாய் ஏனோர் கான்பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாணாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாம்
சந்தித்தே இந்தப்பார் சனங்கள் நின்று தங்கணால்
தாமே காணா வாழ்வாரத் தகவு செய்தவனதிடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே
பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணேறு
ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய்இசை
வச்சத்தால், நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல அவனதிடம்
கச்சத்தால் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினம்
காரார் காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோடு
அங்கைச் சேர்வின்றிக்கே அடைந்துடைந்த வெண்தலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையன்இடம்
கங்கைக்கேயும் பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
அண்டத்தால் எண்திக்கும் அமைந்தடங்கு மண்டலத்து
ஆறேவேறே வானாள்வார் அவரவர் இடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த உம்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவு செய்தவனதிடம்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே
(5)
திக்கிற்றே அற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார் தாரகன்உடல் அவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகால்மீப் புணர்தரும் உயிர்கள்திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை !செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர் களைபவனதிடம்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே
(6)
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறும்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத்துறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய் தாம் ஏயாமைப் பிரிவுசெய்தவனதிடம்
கற்றிட்டே எட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே
(7)
பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலேபோகாமே, காவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே
(8)
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழில்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகர்இறைவன்
இம்பர்க்கேதம் செய்திட்டிருந்து, அரன் பயின்றவெற்பு
ஏரார் பூநேரோர் பாதத்தெழில் விரல் அவண்நிறுவிட்டு
அம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்தனம் செய்தாற்கு
ஆரார் கூர்வாள் வாணாள் அன்றருள் புரிபவனதிடம்
கம்பத்தார் தும்பித்திண் கவுள்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே
(9)
பன்றிக்கோலம் கொண்டிப் படித்தடம் பயின்று !இடப்
பானாம் மால், தானா மேயப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்த பங்கயத்தவன்
ஓதான்ஓதான் அஃதுணராதுருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத், திருக்களங்கொள் பைங்கணின்று
ஏசால்வேறோர் ஆகாரம் தெரிவு செய்தவனதிடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலம் நிறைக்கவும்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
(10)
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணாதே நாளும் சமணொடு உழல்பவரும்
இட்டத்தால் அத்தம்தான் இதன்றதென்று நின்றவர்க்கு
ஏயாமே வாயேதுச் சொல் இலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனதிடம்
கட்டிக்கால் வெட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
(11)
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராரும் கழுமல நகர்இறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்த நற்கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விரகன் மொழிகள்
எஞ்சத் தேய்வின்றிக்கே இமைத்திசைத்தமைத்த கொண்டு
ஏழேஏழே நாலேமூன்று இயலிசை இசைஇயல்பா
வஞ்சத்தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே
தில்லை – சம்பந்தர் தேவாரம் (1):
கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரிஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே
மையார் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்தோச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகேத்தச்
செய்யான் உறைகோயில் சிற்றம்பலம் தானே
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந்திறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறை வண்டறைஓவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே
வரு மாந்தளிர்மேனி மாதோர் பாகமாம்
திருமாம் தில்லையுள் சிற்றம்பல மேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லால் பேணாதுள்ளமே
அலையார் புனல்சூடி, ஆகத்தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையானார்களே
கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றமபல மேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோயெல்லாம் தீர்தல் திண்ணமே
கோணாகணையானும், குளிர் தாமரையானும்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே
பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே
ஞாலத்துயர் காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பல மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே
தில்லை – சம்பந்தர் தேவாரம் (2):
ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர், அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா, நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும், பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய், அருளாய் சுருங்கஎம் தொல்வினையே
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய், எருதேறினாய், நுதல்
பட்டமே புனைவாய், இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய், மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய், இவை மேவியதென்னை கொலோ
நீலத்தார் கரிய மிடற்றார், நல்ல நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணிவார், சடையார்
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழக்
கோலத்தாய் அருளாய் உன் காரணம் கூறுதுமே
கொம்பலைத்தழகெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போல முகத்திரண்டு
அம்பலைத்த கண்ணாள் முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலால் கழற்சேவடி கைதொழ
அம்பலத்துறைவான் அடியார்க்கடையா வினையே
தொல்லையார் அமுதுண்ண நஞ்சுண்டதோர் தூமணி மிடறா, பகுவாயதோர்
பல்லையார் தலையில் பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழ
இல்லையாம் வினை தான், எரியம்மதில் எய்தவனே
ஆகந்தோய் அணி கொன்றையாய், அனல் அங்கையாய், அமரர்க்கமரா, உமை
பாகந்தோய் பகவா, பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய் பொழில்மல்கு சிற்றம்பலம் மன்னினாய், மழுவாளினாய், அழல்
நாகந்தோய் அரையாய், அடியாரை நண்ணா வினையே
சாதியார் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார்குழையாய், திகழப்படும்
வேதியா, விகிர்தா, விழவாரணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கிடமாய சிற்றம்பலம் அங்கையால் தொழவல்ல அடியார்களை
வாதியாதகலும், நலியா மலி தீவினையே
வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய், விகிர்தா, உயிர்கட்கமுது
ஆயினாய், இடுகாட்டெரியாடல் அமர்ந்தவனே
தீயினார் கணையால் புரம் மூன்றெய்த செம்மையாய், திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய், கழலே தொழுதெய்துதும் மேலுலகே
தாரினார் விரி கொன்றையாய், மதிதாங்கு நீள் சடையாய், தலைவா, நல்ல
தேரினார் மறுகின் திருவாரணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாததோர் செம்மையால் அழகாய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய், உன சீரடி ஏத்துதுமே
வெற்றரை உழல்வார், துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளல்மின்
மற்றவர் உலகின் அவலமவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம் காதலால் கழற்சேவடி கைதொழ
உற்றவர் உலகில் உறுதிகொள வல்லவரே
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்தீசனை இசையால் சொன்ன பத்திவை
கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சோழ நாடு (காவிரி – தென்கரை):
- திருச்சி மாவட்டம்: திரிசிராப்பள்ளி திருஎறும்பியூர் திருநெடுங்களம் கற்குடி மூக்கீச்சுரம் (மூக்கீச்சரம்) திருப்பராய்த்துறை தஞ்சாவூர் மாவட்ட...
சோழ நாடு (காவிரி – வடகரை):
- கடலூர் மாவட்டம்: கோயில் - தில்லை (சிதம்பரம்) திருவேட்களம் திருநெல்வாயில் திருக்கழிப்பாலை ஓமாம்புலியூர் கானாட்டுமுள்ளூர் திருநாரையூர் திரு...
தொண்டை நாடு:
- சென்னை மாவட்டம்: திருவொற்றியூர் திருவலிதாயம் திருமயிலை திருவான்மியூர் திருவள்ளூர் மாவட்டம்: திருவிற்கோலம் திருவாலங்காடு திருப்பாசூர் த...
You cannot copy content of this page