திருக்கோடிகா – அப்பர் தேவாரம் (2):

<– திருக்கோடிகா

(1)
சங்குலா முன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்குலா மதவேழம் வெகுண்டவன்
கொங்குலாம் பொழில் கோடிகாவா என
எங்கிலாததோர் இன்பம் வந்தெய்துமே
(2)
வாடி வாழ்வது என்னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல் கூறினேன்
பாடி காவலில் பட்டுக் கழிதிரே
(3)
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்றங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனமொன்றில்லையே
(4)
நாவளம் பெறுமாறு மனன் நன்னுதல்
ஆமளஞ் சொலி அன்பு செயின்அலால்
கோமளஞ் சடைக் கோடிகாவா என
ஏவள்இன்றெனை ஏசும் அவ்வேழையே
(5)
வீறு தான் பெறுவார் சிலராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறுவேன் கோடிகா உளாய் என்றுமால்
ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ
(6)
நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி ஏசறவும் தெரியாததோர்
கோடிகாவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே
(7)
(8)
(9)
(10)
வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழில் கோடிகாவா என
இரங்குவேன் மனத்தேதங்கள் தீரவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page